கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள அஷ்ரப் விளையாட்டு மைதானத்துக் கருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் நேற்று (05-11-2012) காலை திடீரென இறந்துள்ளன.
பல மாடுகள் இவ்வாறு மர்மமான முறையில் திடீரென இறந்தமையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொலிசாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

