திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பிரிவு பாடசாலையின் புதிய இரு மாடிக் கட்டடத்தின் திறப்பு விழாவும். தாருஸ்ஸலாம் ஆரம்பப் பிரிவு பாடசாலையின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்வும் இன்று காலை பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தாருஸ்ஸலாம் ஆரம்பப் பிரிவு பாடசாலையின் அதிபர் திருமதி இஸ்மத் பாத்திமா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் "சுபசன் நிம்தர" பாடசாலை கல்வி வேலைத்திட்டத்தின் ஆரம்பகர்த்தாவும், மேல் மாகாண சபை முதலமைச்சருமான பிரசன்ன ரணதுங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதி உட்பட அதிபர் மற்றும் விஷேட அதிதிகளின் உரை அடங்கிய முழுமையான வீடியோ தொகுப்பை திஹாரிய நியூஸ் இணையத்தில் எதிர்பாருங்கள்.
Tags
திஹாரிய செய்திகள்