ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் விளையாட அவுஸ்த்ரேலியா தயக்கம்!

ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா தயக்கம் காட்டியுள்ளது.

ஆந்திர தலைநகரான ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் 16 பேர் பலியானார்கள் 119 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி இருந்து வந்தது. மேலும் அந்நகரத்தில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தயக்கம் காட்டியது. இந்த நிலையில் வீரர்களின் பாதுகாப்புக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவாதம் தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியா அங்கு விளையாட சம்மதித்தது.

முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் வேலையில், 2 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post