மே முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயதெல்லை 55ல் இருந்து 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக கொள்கை ஆராய்ச்சி பிரிவு அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் சேவை நீடிப்பு வேண்டுகோள் இன்றி 57 வயது வரை அரச ஊழியர்கள் பணி புரியலாம் எனவும் பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களுக்கு மாத்திரமே இந்த கொள்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 55 வயதடைந்தவர்களும் தேவைப்படின் ஓய்வினைப் பெறலாம் என
தெரிவிக்கப்படுகிறது.
source: Ada Derana
