THIRD EYE! அறிவியல் கண்காட்சி இன்று திஹாரிய கிரசன்ட் சர்வதேச பாடசாலையில் ஆரம்பமானது. (புகைப்படங்கள் இணைப்பு)

THIRD EYE! அறிவியல் கண்காட்சி இன்று திஹாரிய கிரசன்ட் சர்வதேச பாடசாலையில் ஆரம்பமானது. இக் கண்காட்சியில் பிரதம அதீதியாக  சீதுவா செய்லான்  சர்வதேச பாடசாலையின் அதிபர் ஜனாப் M. ராசிக் (BSc) அவர்கள் கலந்து கொண்டார்கள். விசேட அதீதிகளாக கம்பஹா மாவட்ட ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஜனாப்  M.Y.M. கஸ்ஸாலி அவர்களும், கம்பஹா மாவட்டத்தின் வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப்பணிப்பாளர்  கௌரவ லலித் குமார அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கிரசன்ட் சர்வதேச பாடசாலையின் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்  கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திஹாரிய கிரசன்ட் சர்வதேச பாடசாலையில் நடைபெறும். (அனுமதி இலவசம்)

கண்காட்சியில் திஹாரிய நியூஸ் கேமராவிட்க்கு பதிவான சில புகைப்படங்கள் உங்களுக்காக












Post a Comment

Previous Post Next Post