இன்று இரவு 7 மணியளவில் அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த இரு வாலிபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளின் டயர் வழுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது என விபத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள், விபத்தில் காயமடைந்த ஒருவர் சேர் ராசிக் பரீத் மாவத்தையை சேர்ந்த ஜனாப் ரமீஸ் (வேன் டிரைவர்) அவர்களின் மகன் ருமைஸ் வதுபிடுவள வைத்தியசாலையிலும், கருவத்தோடத்தைச் சேர்ந்த ஜனாப் முனீர் அவர்களின் மகன் ருமைஸ் வதுபிடுவள வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிட்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Tags
திஹாரிய செய்திகள்