கடந்த வெள்ளிக்கிழமை (09-09-2011) கலகெடிஹேனையில் பஸ் வண்டியொன்று லொறியுடன் மோதியதில் பஸ் சாரதி சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார்.
கொழும்பிலிருந்து கேகாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி, மணல் நிரப்பி வந்த லொறியுடன் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றது. விபத்தின் பொது பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன், சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
புகைப்படங்கள்: முஹம்மத் அஸ்லம்