கலகெடிஹேன சிறுவர் அனாதை இல்லத்தில் தீ, சிறுவன் பலி


இன்று காலை 11 மணியளவில் கலகெடிஹேன பத்தல, ஹேனவத்தையில் அமைந்துள்ள சிறுவர் அனாதை இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிலந்துல்லன். 

இரண்டு மாடிகளை கொண்ட கட்டிடத்தில் மேல்மாடியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஹரகம பிரதேசத்தை சேர்ந்த பBண்டையா என்றழக்கப்படும் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனே இத் தீ விபத்தில் உயிரிலந்துல்லன். உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நிட்டம்புவா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேட்கொண்டுள்ளனர்.





புகைப்படங்கள்:  ஷையாப்

Post a Comment

Previous Post Next Post