2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரச பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு திஹாரிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 2010 நடாத்திய பாராட்டு விழா நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக மேல்மாகாண உறுப்பினரும், கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான சாபி ரஹீம் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையில் அல் அஸ்ஹர் மத்திய கல்லுரியிட்கு 5 இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்குவதாக வாக்குரிதியளித்துள்ளர். இத் தொகையை எதிர்வரும் 2012 ஜனவரி மாதத்தில் வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.