சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்கள் செலவில் புணர்நிர்மானம் செய்யப்பட்ட நாப்பிரித்த மஸ்ஜிதுல் பாதா பள்ளிவாசல் பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது. சகோதரர் ரியாஸ், சகோதரர் நசார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க மேல்மாகாண சபை உறுப்பினர் கெளரவ ரஞ்சித் ரூபசிங்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பதைக்கு கொங்கிரீட் போடப்பட்டது.
இன்று மாலை சகோதரர் நசார் அவர்களின் வீட்டுக்கு அருகில் நடைபெற்ற திறப்பு விழா கூட்டத்திற்க்கு மேல்மாகாண சபை உறுப்பினர் கெளரவ ரஞ்சித் ரூபசிங்க மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் தரங்க பிரபாத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Tags
திஹாரிய செய்திகள்
