வவுனியாவில் நடந்த விபத்தில் திஹாரிய பொல்ஹேனையைச் சேர்ந்த முஹம்மத் பர்ஹான் காலமானார்.


வவுனியா, பறநாட்டினகல் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ - 9 வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் வவுனியா பகுதியில் இருந்து சென்ற டிப்பர் ரக வாகனமும் வான் ஒன்றுமாக மூன்று வாகனங்களே விபத்தில் சிக்கின.

இவ் விபத்தில் திஹாரிய  பொல்ஹேனையைச் சேர்ந்த முஹம்மத் பர்ஹான் காலமானார். மேலதிக தகவல்களை எதிபாருங்கள்.




புகைப்படங்கள் மற்றும் உசாத்துணை : 
தமிழ்மிரர் இணையத்தளம்

Post a Comment

Previous Post Next Post