மனித குலத்திற்கான கருணை இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அலை அவர்கள் எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு 7 இலுள்ள புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கள் முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகங்களை சேர்ந்த சமய தலைவர்கள் பலர் கலந்துகொண்டு முஹம்மது நபி (ஸல்) அலை அவர்கள் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை, முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா, முஸ்லிம் மீடியா போரம், கொழும்பு பெரிய பள்ளிவாசல், வை.எம்.எம்.ஏ பேரவை மற்றும் நொலேட்ஜ் பொக்ஸ் உட்பட சுமார் 30 இஸ்லாமிய நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள்: Knowledge Box)








