தீப்பிடிக்கும் அபாயம்!! 74 லட்சம் டெயோட்டா கார்களை திரும்பபெற முடிவு.


உலகில் முன்னணி கார் நிறுவனமாக டொயாட்டா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் சமீபகாலங்களில் யாரிஸ், கொராமா, கேம்ரி ஆகிய பெயர்களில் கார்களை தயாரித்து விற்பனைக்கு விட்டது. உலகம் முழுவதும் பல லட்சம் கார்கள் விற்பனை ஆனது. 


ஆனால் இந்த கார்கள் ஜன்னலை இயக்கும் சுவிட்ச்சில் கோளாறு இருப்பது தெரிய வந்தது. இந்த சுவிட்ச்சை இயக்கும் போது அது உருகியது. இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் இருந்தது. எனவே உலகம் முழுவதும் விற்பனை செய்த இந்த வகை கார்களை திரும்பபெற முடிவு செய்துள்ளது. 

அதன்படி 74 லட்சம் கார்கள் திரும்ப பெறப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 24 லட்சம் கார்கள் திருப்ப பெறப்படுகின்றன. ஐரோப்பா நாடுகளில் 13 லட்சம் கார்களும், இங்கிலாந்தில் 13 லட்சம் கார்களும், சீனாவில் 14 லட்சம் கார்களும் திரும்ப பெற உள்ளன. 

இவை தவிர ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளிலும் திரும்ப பெற உள்ளனர். இந்த கார்களில் புதிய சுவிட்ச்சை அமைத்து கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 

1996-ம் ஆண்டு போர்டு நிறுவனம் ஒரே நேரததில் 80 லட்சம் கார்களை திரும்ப பெற்றது. அதன் பிறகு இவ்வளவு அதிக அளவில் ஒரே நேரத்தில் கார்கள் திரும்ப பெறப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Post a Comment

Previous Post Next Post