பத்தரமுல்லை ராஜகிரிய பிரதான பாதையில பாராளுமன்றத்துக்குச் செல்லும் பிட்டகோட்டை சந்தியில் அழகான வாழையிலை வடிவிலான பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையும், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள இலங்கை பொறியியற் கூட்டுத்தாபனமும் இணைந்து “தியத உயன” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அழகிய வாழையிலை வடிவிலான பஸ் நிலையம் அமைந்திருக்கும் இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.




