பிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவருடம் இன்றே


பொத்துவில் பிரதேசத்தில் தலைப்பிறை தென்பட்டமைக்கான முறையான ஆதரங்களைக் கொண்டு முஹர்ரம் மாதம் வெள்ளிக்கிழமையான இன்றே ஆரம்பமாகின்றது என பிறைக்குழு தீர்மானித்துள்ளது. இதனால் இஸ்லாமிய புது வருடம் இன்றாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கனவே பிறை தென்பட்டமைக்கான உரிய சான்றுகள் கிடைக்கப்பெறாமையினால் சனிக்கிழமையே முஹர்ரம் மாதம் ஆரம்பிக்கிறது எனவே அன்றையே தினமே இஸ்லாமியப் புதுவருடம் ஆரம்பிக்கும் என பிறைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:வீரகேசரி 

Post a Comment

Previous Post Next Post