இஸ்ரேலிய யுத்த விமானங்கள் ஹமாஸ் அரச அலுவலகங்கள் மீது குண்டு போட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் இஸ்மைல் ஹனியானின் அலுவலகம், பொலிஸ் தலைமையகம் ஆகியனவும் இஸ்ரேலின் தாக்குதலால் தரைமட்டமாகியுள்ளன.
எனினும் எதிரியை வீழ்த்தும் அளவுக்கு எமது அமைப்பு இன்னும் வலுவாகவே இருக்கிறது என ஹமாஸ் பேச்சாளர் அபு உபைதா சூளுரைத்தார். இதனிடையே ஹமாஸ் ஆட்சியில் இருக்கும் காசாவில் இராணுவ நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகும். நேற்று எச்சரித்தார்.
Tags
உலகச் செய்திகள்
