அண்மைக்காலமாக பதுளை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பலசேனா உள்ளிட்ட அமைப்புகள் தீவிர இனவாத பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளமையும், இதனால் பதுளை பிரதேச முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை பதுளை நகரில் முஸ்லிம் சகோதரர் ஒருவருடைய கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட கையுறையில் பௌத்த சின்னம் பொறிக்கப்பட்ட கையுறைகள் காணப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை 23-11-2012 அன்று பௌத்த அமைப்புக் அமைப்புக்களும், பௌத்த குருமார்களும், பிரதேச இளைஞர்களும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.



