தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸா - காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாமுனை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய ஒருவரின் சடலமொன்று நேற்று  (23.11.2012) காலை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பாலமுனை 10ம் வட்டார மார்க்கான் மார்கார் வீதியில் வசிக்கும் ஹனிபா முஹம்மது நியாஸ் (வயது 41) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பைச் சோந்த இவர் பாமுனை பிரதேசத்தில் திருமணம் செய்து பத்துவருடங்களுக்கு மேல் வசித்து வருவதாகவும் இவரது மனைவி வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக  சென்றுவந்த நிலையில் தன்னை பார்க்கவரவில்லை என்ற விரக்தி நிலையில் இவர் காணப்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவருடன் நேற்று மேசன் கூலி வேளை செய்த மேசன் தொழிலாளி ஒருவர் இவரின் வீட்டுக்கு சென்று பார்த்த போது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக்காணப்பட்டுள்ளார் .இதையடுத்து காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து காத்தான்குடி பொலிசார் ஸ்த்தளத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.அப்துல்லாஹ் சடலத்தை பார்வையிட்டார்.


இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்திவருவதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post