“பாலும் தேனும் வழிந்தோடும் பட்ஜட்” என்ற மகுடத்தில் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் கவிபாடி வாழ்த்தினார். ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு - செலவு திட்டம் தொடர்பாக நேற்று இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதும் எ.எச்.எம். அஸ்வர் எம்.பி. வழமை போன்று சிங்கள மொழியில் தமக்குள்ள பாண்டித்தியத்தை வெளிக்காட்டும் நோக்கில் சிங்கள கவிபாடினார். அதனைத் தொடர்ந்து தமிழ்மொழியிலும் அதே கவிதையை பாடினார்.
நன்றி: தினகரன்
