உலக அழிவு தொடர்பில் அறிந்துகொள்வதற்காக 100 இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் நேற்று வளிமண்டலவியல் தினைக்கலத்திட்கு வந்ததால் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டதாக வளிமண்டலவியல் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
"உலக அழிவுக்கு வழிவகுக்கும் இயற்கை அனர்த்தங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக மேற்படி மக்கள் நேற்றைய தினம் பெருமளவிலான தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர் " உலக அழிவு தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட வதந்தி மற்றும் பொய் பிரசாரங்களை நம்பி அச்சமடைந்த மக்கள் இவ்வாறான தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியதாக அவர் தெரித்துள்ளார்.
"சில இணையத்தளங்கள் உலக அழிவு தொடர்பிலான வதந்திகளை பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எப்படியிருப்பினும் நேற்றைய தினமானது வழமையை போன்று எந்தவித ஆபத்துமின்றி முடிவடைந்தது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
