(உ.ரஹ்மான்)
பிரதம நீதியரசர் ஷிராணிபண்டார நாயக்கவுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணையை கண்டித்து அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் இன்று (12.12.2012) ஒருமணிநேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கண்டன அமைதி ஆர்ப்பாட்ட மொன்றிலும் ஈடுபட்டனர்.
இன்று காலை அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்னாள் ஒன்று கூடிய அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் நீதித்தறையின் சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற சுலோகங்களை தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் கடமையாற்றும் அனைத்து சட்டத்தரணிகளும் கலந்து கொண்டனர்.



