கல்லடிப் பாலத்தின் கீழ் மீண்டும் ஆயிரக்கணக்கான கடல் பாம்புகள்.


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான பருவ மழை காரணமாக  காலநிலை சீர்குலைவு ஏற்பட்டு, வெள்ள அபாயம் நிலவி வரும் நிலையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் பெருமளவிலான கடல் பாம்புகள் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டமை நினைவு கூரத்தக்கதாகும். 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திற்கு சில தினங்களுக்கு முன்னரும் கல்லடி பாலத்தின் கீழ் பாம்புகள் படையெடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




படங்கள் : மருதமுனை ஒன்லைன் 

Post a Comment

Previous Post Next Post