நாட்டில் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிய விதிகளுக்கமைவாக மாதாந்தம் 50 ஆயிரம் முதல் 1 இலட்சம் ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
எனினும் 50 ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்யப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
