முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் - பொது பல சேனா

முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக் காலங்களாக நாட்டில் நடந்துவரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக பிபிசி தமிழோசையிடம் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் மத்தியில் மத அடிப்படை வாதமும் கடும்போக்கு வாதமும் தீவிரமடைந்து வருவதாகவும் அதனால் பெரும்பான்மை பௌத்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் ஞானசார தேரர் கூறினார். ஹலால் சான்றிதழ் பெறவேண்டுமென்று வர்த்தக நிலையங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அதனால் பௌத்தர்களின் உணவுப் பழக்கமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெறுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் ஞானசார தேரர் தமிழோசையிடம் கூறினார். சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்குரிய சட்டங்களுக்கு பெரும்பான்மை பௌத்தர்களும் கட்டுப்பட வேண்டியதை ஏற்க முடியாது என்ற வாதத்தையும் அவர் முன்வைத்தார்.

இதேவேளை, முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருள் வாங்கக் கூடாது என்றும் பள்ளிவாசல்களை அகற்ற வேண்டுமென்றும் நாட்டின் பல இடங்களிலும் நடக்கும் போராட்டங்களுக்கும் பொது பல சேனா அமைப்புக்கும் சம்மந்தம் இல்லையென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நன்றி - BBC 

Post a Comment

Previous Post Next Post