ரிஸானாவின் குடும்பத்தை ஜனாதிபதி நாலை சந்திக்கவுள்ளார்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக்கின் குடும்பத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை சந்திக்கவுள்ளார். இது தொடர்பான அழைப்பு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து ரிஸானாவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


நாளை மாலை இடம்பெறவுள்ள இச் சந்திப்பில் ரிஸானா நபீக்கின் குடும்ப உறுப்பினர்கள் சகலரும் பங்கேற்கவுள்ளனர். இதன்பொருட்டு இன்றைய தினம் அவர்கள் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நன்றி: விடிவெள்ளி


Post a Comment

Previous Post Next Post