பொதுபலசேனாவிற்கு நோர்வேயிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது. - அசாத் சாலி

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொதுபலசேனா  அமைப்புக்கு நோர்வேயிலிருந்து நிதி கிடைக்கிறது. இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியும்  என முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

அசாத் சாலி  நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
 
ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம்  முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு  வழங்கப்படுகின்றது என பொதுபலசேனா குற்றம் சாட்டுகிறது.  விசாரணை செய்து இதனை நிரூபியுங்கள் பார்க்கலாம்.
 
முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு நிதி வழங்கவில்லை. பொதுபலசேனா தான் நோர்வேயிலிருந்து நிதியினை பெற்றுக்கொள்கின்றது என்றார்.

நன்றி : விடிவெள்ளி இணையம் 


Post a Comment

Previous Post Next Post