புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத்தொகுயில் இன்று சட்டத்தரணிகள் போராட்டம்

சட்டத்தரணிகள் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை 11.15 அளவில், புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத்தொகுயில் முறைப்பாட்டு மனுவில் கைச்சாத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்ட்டது.

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவளித்த சட்டத்தரணிகளுக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கையெழுத்து போரட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை தங்களுக்கு வழங்கப்படுகின்ற இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு கோரி, ஆசிரியர்கள் சங்கங்கள் பல இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்துள்ளன.

ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற இடமாற்றங்கள், இடமாற்ற ஆணைக்குழுவின் ஊடாக இடம்பெறவில்லை என்பதாலேயே இந்த முறைபாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post