'ரிசானாவை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டதே'' என்று அவரது விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவரான சவுதி அரேபியாவில் பணியாற்றும் டாக்டர் கிஃபாயா இப்திஹார் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்றுகூட ரிசானாவைப் பார்க்க அவர் வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்ற டாக்டர். கிஃபாயா இப்திஹார், பார்க்க முடியாமல் மிகுந்த வேதனையுடன் வீடு திரும்பியுள்ளார்.
அவர் கவலையுடன் பிபிசிக்கு வழங்கிய செவ்வியை இங்கு நேயர்கள் கேட்கலாம்.
