நகர அபிருத்தி அதிகார சபை, கூட்டுறவு மற்றும் உள்ளுர் வர்த்தம் தொடர்பான அமைச்சு, துறைமுக ,நெடுஞ்சாலைகள் அமைச்சு ,மேல் மாகாண சபை, கொழும்பு மாநகர சபை ,பேலியகொடை நகர சபை உட்பட மெனிங் சந்தை வர்த்தகர் சங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள மேற்படி சந்தை கட்டிடத் தொகுதியில், 120 சதுர அடிகளைக் கொண்ட 400 மொத்த வியாபார கடைகளும், 662 சில்லறைக்கடைகளும் அமைக்கப்படும்.
அத்துடன் மரக்கறி மற்றும் பழவகைகளை ஏற்றுமதிச் செயவதற்காக தயார் படுத்துவதற்கான இடம் ,ஊழியர்களுக்கான ஓய்வூதிய விடுதி, சிற்றுண்டிச் சாலைகள் , 135 லொரிகளை நிறுத்துவதற்காக இரண்டு தரிப்பிடங்கள், 200 மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதற்கான பாரிய தரிப்பிடம் என்பனவும் இதில் உள்ளடக்கப்படும். அதற்காக அரசாங்கம் 135 கோடியே 700 லட்சம் ரூபாவை செலவிடும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புறக்கோட்டையில் தற்போதைய மெனிங் சந்தை அமைந்துள்ள இடத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய பஸ் தரிப்பிடம் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கான கடை தொகுதி ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளன.