'விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும்
கப்பல்கள் எங்கே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை
ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் கொழும்பு, மோதர பகுதியில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.'ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் அசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.