நாட்டில் பரவியுள்ள மூளைக் காச்சல் நோயியை கட்டுப்படுத்த நடவடிக்கை.


நாட்டின் பல மாவட்டங்களிலும் பரவியுள்ள மூளைக் காச்சல் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மூளைக் காய்ச்சல் தடுப்பூசி ஏற்றாத 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 5 வயதை பூர்த்தியடைந்த சகல சிறுவர்களுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் மூளைக் காய்ச்சல் நோய் குறித்து பதிவாகியிருந்தது.

இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் முளைக் காய்ச்சல் நோயிற்கு 50 சிறுவர்களுக்கு மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றியின் உடலிலுள்ள கிருமிகள் நுளம்பின் ஊடாக மனித உடலில் சேர்வதன் மூலம் மூளைக் காய்ச்சல் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறாயினும் இராத்தினபுரியில் ஏற்பட்டுள்ள மூளைக் காய்ச்சல் நோயிற்கு இரத்தினக் கல் அகழ்வு கிடங்கே காரணம் என சப்ரகமுவ மாகாண அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் மூளைக் காய்ச்சல் நாட்டின் பல பாகங்களில் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரித கதியில் நடைபெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post