வங்கதேச இஸ்லாமியக் கட்சியின் உபதலைவருக்கு மரண தண்டனை.



வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

மனிதப் படுகொலை, சித்ரவதைகள் ஆகியவைகள் உட்பட பல குற்றங்களுக்காக ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் உபதலைவரான டெல்வார் ஹொசைன் சைதீ அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பக்கசார்பானது என்று இந்த வழக்கு விசாரணையை விமர்சிக்கும் ஜமாத் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த மோதல்களில் குறைந்தபட்சம் 14 பேராவது கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் 1971 இல் பிரிந்ததை இந்த ஜமாத் கட்சி எதிர்த்தது.

ஆனால், சுதந்திரப் போராட்டத்தின் போது மனிதப் படுகொலையில் ஈடுபட்ட பாகிஸ்தானிய ஆயுதக்குழுக்களுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாடை, இந்தக்கட்சியின் தலைவர்கள் மறுக்கிறார்கள்.

- BBC

Post a Comment

Previous Post Next Post