குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஏற்பாடு செய்யும் புனித உம்ரா 1434 / 2013 பயணத்தை முன்னிட்டு உம்ரா யாத்ரீகர்களுக்கு "காண கண் கோடி வேண்டும் கஃபாவை...!" என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15.03.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான "அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளி"வாசலில் சிறப்புப் பயிலரங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
அமர்வு 1: மக்ரிப் முதல் இஷா வரை
திருக்குர்ஆனை திருத்தமாக ஓத சிறப்பு பயிற்சி வகுப்பு
அமர்வு 2: இஷா முதல் இரவு 9:30 வரை
புனித உம்ரா சிறப்புப் பயிலரங்கம்
தலைப்பு: காண கண் கோடி வேண்டும் கஃபாவை...!
சிறப்புரை:
குவைத் வாழ் தமிழ் ஆலிம் / அறிஞர் பெருமக்கள்
குறிப்பு:
அமைப்பு, கொள்கை வேறுபாடின்றி தமிழறிந்த அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் இந்த பயிலரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
தெளிவான விளக்கமான எளிமையான சொற்பொழிவுகள் இடம்பெறும்.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைவரும் வருக... அன்பர்களையும் அழைத்து வருக... அளவிலா அறிவமுதல் பெறுக...
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
Tags
உலகச் செய்திகள்
