ஊவா மாகாண முஸ்லிம் பிரதிநிதியில்லாத குறையை மலையக முஸ்லிம் மாநாடு தீர்த்துள்ளது.


(எ.எம்.எம். முஸம்மில்)
ஊவா மாகாண சபையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி இல்லை என்ற குறையை மலையக முஸ்லிம் மாநாடு தீர்த்துள்ளது,

“ஊவா மாகாண சபையி இன்று ஆளும் கட்சியிலோ ,எதிர் கட்சியிலோ ஒரு முஸ்லிம் பிரதி நிதியில்லை . ஆனாலும் அந்த குறையை இன்று மலையக முஸ்லிம் மாநாடு (U.C.M.C) தீர்த்து வருகிறது. 


இந்த ஊவா மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரியை  உத்தியோக பூர்வமாக பெற்றுகொள்வாதிலும் அதை பெற்றுகொண்டபிரகு, கட்டிட வசதி போதாமல் இருந்தபோது பாரியதொரு கேட்போர் கூடத்தை அமைத்து கொடுத்து, அதன் பின்பு இவ்வித்தியாலயதிட்கு பெரும் குறையாக இருந்த  இந்த காரியாலய  கட்டிடத்தையும் கட்டித்தந்து மிகபெரிய சேவையை இவர்கள் செய்வதை இட்டு நான் மகிழ்ச்சி அடைவதுடன் பணிப்பாளர் என்ற வகையில் எனது நன்றியையும் தெரிவித்து கொலகின்றேன்” என்று பதுளை கோட்ட கல்வி காரியாலய பணிப்பாளர் மு ஜெயதிலக அவர்கள் தெரிவித்தார்கள். 

மலையக முஸ்லிம் மாநாட்டின் (U.C.M.C) மூலம் ப / பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு கட்டிகொடுக்கப்பட்ட காரியாலய கட்டிட திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மு. ஜெயதிலக அவர்கள், மேலும் கருத்து கூறுகையில் முஸ்லிம்கள் மத்தியில் பல பிரிவுகள் காணப்பட்டதால் இந்த கல்லூரியை ஆரம்பிக்கும் பொது பல பிரச்சினைகள் எழுந்தன . அதிகாரிகள் இக்கலூரியை உங்களுக்கு பெற்றுத்தருவதில் என்றும் பின்னிக்கவில்லை.  உங்களுக்குள் ஏற்பட்ட கருதுமுரண்பாட்டின் காரணமாக  இப்பாடசாலையில் இருந்து 90 மாணவர்கள் ஒரேயடியாக விலக்கிக்கொண்டு சென்றாலும் இன்று இப்பாடசால இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகளையும் அரவனைது கொண்டு முனேறி செல்கின்றது பாராட்டப்படவேண்டிய விடயமாகும் , இனிவரும் காலங்களில் கருத்து ஒற்றுமையுடன் சேர்ந்து இப்பாடசாலையை முன்னேற்ற என்னாலான அனைத்து உதவிகளையும் செய்ய பின்னிற்க மாட்டேன் என்றும் கூறினார். 


U.C.M.C யின் செயலாளர்  ஏ எம் எம் முசம்மில் வரவேற்பு உரையை நிகழ்த்திய   இந் நிகழ்வில் மலையக முஸ்லிம் மாநாட்டின் உறுப்பினர்கள் ,பெற்றார்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.    




Post a Comment

Previous Post Next Post