ஹலாளுக்கு சான்றிதழ் வழங்குவது ஹராம் - முஸம்மில்


ஹலால் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையாகும். அதற்காக ஹலால் சான்றிதழ் வழங்குவது ஹராம் என  தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
அன்று தொட்டு இன்றுவரை முஸ்லிம்கள் ஹலால் முறையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட அடிப்படைவாத சபைகள் ஹலாலை உணவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தி அதற்கு சான்றிதலும் வழங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். 

பன்றி எண்ணை தவிர்ந்த பால்மா உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படட்டுள்ளது. இதற்கான ஆதாரம் எம்மிடமுள்ளது. ஹலால் எனக்கூறி மக்களை ஏமாற்றுவதற்கு எந்த சபைக்கும் இடமளிக்கமுடியாது. 

அரசாங்கம் ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் தொடர்பில் அறிவிப்பை குறிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போது சகல இன மக்களும் தமக்கேற்ற உணவை பெற்றுக்கொள்ளமுடியும். வெறுமனே ஹலால் சான்றிதழை வழங்குவது முட்டாள்தனமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 Comments

  1. Sariyana loosa iruppan pola irukku...

    ReplyDelete
  2. yaru ivan muslima illati kafira?ulamaakkal ivanai kandikka venum.

    ReplyDelete
  3. பன்றியின் மேல் வைத்து பன்றியை வெட்டுது தான் இது. இந்த ஆட்டமெல்லாம் முடியும் காலம் வரும் இன்ஷா அல்லாஹ்
    பிரித் ஓதின தண்ணி குடித்தவன் இதுவும் செய்வான் இன்னமும் செய்வான் ஹஸ்பியல்லாஹ்

    ReplyDelete
  4. muslim endra oru poarvikkul oru kafeer.

    ReplyDelete
  5. iverum bothubale senaavil oru mukkiye urupiner!

    ReplyDelete
Previous Post Next Post