சில ஊடகங்களில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழை வாபஸ் பெற்றதாகவும், இன்னும் சில ஊடகங்களில் ஹலால் சான்றிதழ் வாபஸ் பெறப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது. இந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இதுவரை எந்த ஒரு இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
