ஹபாயாவில் கைவைக்க முடியாது : சோஷலிச பெண்கள் அமைப்பு

முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா உடையில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் பிக்குகளுக்கு கிடையாது என  சோஷலிஸ பெண்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தம்மிகா சில்வா தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
பொது  பல சேனாவின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
 
முஸ்லிம் பெண்கள் தமது கலாசாரத்துக்கு அமைய ஹபாயா அணிகின்றனர்.அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.
 
இது விடயத்தில் பெளத்த பிக்குகள் தலையிட முடியாது. அந்த அதிகாரம் பிக்குகளுக்கு இல்லை.
 
பெளத்த  தர்மத்தை மீறி சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொது பல சேனா வுக்கு எதிராக பெளத்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.
 
ஹலால் விடயத்தில் மெளனம் காத்த அரசு ஹபாயா விடயத்தில் என்ன செய்யப்போகிறது என கேள்வியெழுப்பினார்.
.

1 Comments

  1. ஒத்துகொள்ள வேண்டிய உண்மை.... பெண்களிடம் இருக்கும் வீரம் ஆண்களிடம் இல்லை.

    ReplyDelete
Previous Post Next Post