பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிப்பது சட்டவிரோதம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் எந்தவித செயற்திட்டங்களுக்கும் உத்தியோகபூர்வமாக பணம் அறிவிடுவது சட்டவிரோதமானது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாணவர்களிடம் பலவந்தப்படுத்தி ஒருபோதும் பணம் அறவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்
