அஸாபிர் மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் நாம்புளுவ அணி வெற்றி...

ஜம்மிய்யத் தளபாவின் சிறுவர் பகுதியான அஸாபிர் மாணவர்களுக்கிடையிலான  கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று காலை 9  மணியளவில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.





இப்போட்டி திஹாரிய அஸாபிர் மாணவர்களுக்கும் நாம்புலுவ பஸ்யால அஸாபிர் மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இப் போட்டியை ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் திஹாரியக் கிளை ஏற்பாடு செய்து நடாத்தியது.


மாணவர்களுக்கிடையே வேற்றுமைகளைப் போக்கி சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்கும், வெற்றி தோல்விகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவுமே   இது போன்ற நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதாக அஸாபிர் பயிற்சிநெறி பொறுப்பாளர் சகோதரர் அப்ரார் (நளீமி) தெரிவித்தார்.



இன்று நடைபெற்ற போட்டியில் நாம்புலுவ அஸாபிர் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டதுடன் 
திஹாரிய அஸாபிர் மாணவர்கள் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது. வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தை சகோதரர். கலாம் அவர்கள் வழங்கிவைத்தார். 









Post a Comment

Previous Post Next Post