ஆயுர்வேத நிலையம் பெயரில் கலகேடிஹெனையில் இயங்கிய விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகை!


ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கலகேடிஹெனை பகுதியில் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து 24, 27 மற்றும் 32 வயதுடைய பெண்களும் விபச்சார விடுதியின் நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மூன்று தூதர்களை அனுப்பி இரண்டு வாரங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் விசேட பிடியாணை உத்தரவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தல, கெஸ்பேவ மற்றும் பொரளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post