அஷ்ஷெய்க். தமீம் (நளீமி):
ஜம்இய்யதுத் தலபா ஒவ்வொரு வருடமும் க.பொ.த சா/த பரீட்சையை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அவர்களது பரீட்சையைத் தொடர்ந்து 5 நாள் வதிவிட செயலமர்வுகளை நடாத்தி வருகிறது. அந்த வகையில் இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வெற்றிகரமாக இப்பயிற்சி நெறிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளினால் மத்திய மாகாணத்தின் பல பகுதகிளிலும், கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் கடந்த 22-ஆம் திகதி முதல் இப் பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரையில் இப்பயிற்சி நெறிகளில் கலந்து கொள்ளத் தவறிய சகோதரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 27-ஆம் திகதி தெல்கஹகொடையிலும், 31-ஆம் திகதி மடவளையிலும் இறுதியாக இன்னும் இரண்டு பயிற்சி நெறிகள் ஆரம்பிக்க இருக்கிறது. இவற்றிலே கலந்து கொள்ள விரும்பும் சகோதரர்கள் இன்னும் தாமதித்து இவ் அரிய வாய்ப்பை இழந்து விடாதிருக்க உடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு உங்களது வாய்ப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சகோ. ஷாஹித் : 077 9197575
சகோ. முஹம்மத் : 075 7183198
அஷ்ஷெய்க். தமீம் (நளீமி)
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.
தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் பயிற்சிநெறிகளின் சில புகைப்படங்கள்








